Monday, November 7, 2011

கடலூர் மாவட்ட சுற்றுசூழல் இணை அலுவலக திறப்பு விழா


கடலூர் மாவட்ட சுற்றுசூழல் இணை அலுவலக திறப்பு விழா பண்ருட்டியை அடுத்த சி.பகண்டை கிராமத்தில் கடந்த 06 /11 /2011 அன்று  நடைபெற்றது. மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் சாவித்திரி அலுவலகத்தை திறந்து வைத்தார்.  தென்மண்டல தலைமை அமைப்பாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகிக்க, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி தலைமை தாங்கி இவ்விழாவை நடத்தினார். சி.பகண்டை கிராம பஞ்சாயத்து தலைவர் ப.வை.எழில்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் பாரதிமோகன், மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் கஜலக்ஷ்மி, துணை அமைப்பாளர் கீதா, K.N. பேட்டை ஒருங்கிணைப்பாளர் விஜயராம், இணை  ஒருங்கிணைப்பாளர் நூர்முகமது, உச்சிமேடு ஒருங்கிணைப்பாளர் இளவரசி ஆகியோர் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுசூழல் இணை அமைப்பளார்  ராம்பிரியா இவ்விழாவுக்கு ஏற்ப்பாடு செய்து இருந்தார்.