Sunday, September 25, 2011

கீழ்செருவாய் கிளை அலுவலகம் திறப்பு விழா

கடலூர்  மாவட்டம் கீழ்செருவாய்  கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 25-09-2011 அன்று மாலை 2 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர்  திரு R . முருகன்  வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுகோட்டை  மாவட்ட தலைமை  ஒருங்கிணைப்பாளர் திரு. P K  M. சாகுல் ஹமீது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கிளை இணை மற்றும் துணை ஒருன்கினைப்பளர்கள் திரு R . செந்தில்  மற்றும் திரு R . தினேஷ் ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.

ராமநத்தம் கிளை அலுவலகம் திறப்பு விழா


கடலூர்  மாவட்டம் ராமநத்தம்  கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 25-09-2011 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. கிளை ஒருங்கிணைப்பாளர்  திரு S . சிவகுமார்  வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். புதுகோட்டை  மாவட்ட தலைமை  ஒருங்கிணைப்பாளர் திரு. P K  M. சாகுல் ஹமீது, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கிளை இணை மற்றும் துணை ஒருன்கினைப்பளர்கள் திரு B . தன்ராஜ்  மற்றும் திரு R . வீரமணி ஆகியோர் நன்றி உரை வழங்கினர்.

Friday, September 23, 2011

உங்களுடன் பேசுகின்றேன்->(2)



எனது உயிரினும் மேலான தோழர்களே...

நமது இயக்கமானது அநீதிக்கு எதிராக போரடுவதற்க்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கமாகும். உலக உயிர்கள் எங்கெல்லாம் நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்காக குரல் கொடுக்க, போராட உருவாக்கப்பட்ட இயக்கமே நமது NSWF (National Social Welfare Foundation).  ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர் போன்ற இடைவெளிகளை இல்லாமல் செய்வதற்காக உண்மையாக பாடுபடுகின்ற இயக்கம் நமது இயக்கம். ஜாதிகுடிசைகளையும் சேரி குடிசைகளையும் ஒன்றிணைக்கும் பாலம்தான் நமது இயக்கம். அண்ணார்ந்து பார்க்கின்ற மாளிகையும் அதன் அருகில் இருக்கின்ற  ஓலை குடிசையும் ஏன்? ஏழைகளுக்கு ஏற்றம் எப்போது? மாற்றம் எப்போது? மாற்றும் கருவியாக நாம் இருக்க  வேண்டாமா? எளியவர் வலியவர் என்ற ஏளனமான நிலையை இல்லாமல் செய்வோம்.
 இன்று மனிதன் மனிதநேயத்தை இழந்து மனித மிருகமாக மாக மாறிவிட்டான். அதனால் தான் எங்கெங்கு காணினும் மனித உரிமைகள் மீறப்படுகின்றது. உதரணமாக பரமக்குடி துப்பாக்கி சூட்டினை எடுத்துக்கொண்டால், மனித உயிர்கள் காக்கை குருவிகள் போன்று காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்டு இருக்கின்றன. அரசுக்கோ, காவல் துறைக்கோ உயிர்களைக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது? எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க நமது இயக்கமும் நாமும் இவ்வுலகில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாற வேண்டும். சட்டங்கள் அனைவருக்கும் சமமாக வேண்டும் என்றால் நாம் சட்டத்தையே மாற்றும் மாபெரும் மக்கள் சக்த்தியாக மாற வேண்டும். அதனால் தான் தோழர்களே உங்களிடம் எப்போதும் நான் கூறுவது "ஒவ்வொரு வீட்டிலும் NSWF உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும்". தோழர்களே சிந்தியுங்கள் நாம் வாழும் காலத்தில் மனித உரிமை மீறல் அவலங்களை துடைத்து எறியாவிட்டால் பிறகு எப்பொழுது இதற்க்கு  விடிவு காலம் பிறக்கும். 
"இன்று முடியாவிட்டால் பிறகு எப்பொழுது முடியும்? 
நம்மால் முடியாவிட்டால் பிறகு யாரால் முடியும்?"  என்றெண்ணி இயக்கப்பபணிகளை ஆற்றுங்கள். மாற்றம் ஒருநாள் நிகழ்ந்தே தீரும். நம்மால் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும். உலகம் கட்டாயம் நம்மை திரும்பி பார்க்கும்.
   
குறிப்பு :                                                                                
நமது அமைப்பானது பல்வேறு தளங்களில் மக்களின் உரிமைக்காக போராடுகிறது.குறிப்பாக (1) சமூக சேவை பிரிவு, (2) ஊழல் எதிர்ப்பு பிரிவு, (3) மகளிர் உரிமை பிரிவு, (4) நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு, (5) மனித உரிமைகள்  பிரிவு என்ற ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்தந்த பிரிவை சேர்ந்த நமது இயக்க மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, கொம்யூன், நகர, கிளை தலைவர்கள்  பணியாற்றுகின்றார்கள்.   இயக்க வளர்சிக்காக அரும்பாடு படும் தோழர்களை வாழ்த்தி வணங்குகின்றேன்...உறுப்பினர்களும், நிர்வாகிகளும் என்னை தொடர்பு கொள்ள விரும்பினால் nswfindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.  நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் பங்கேற்க உள்ள நமது இயக்க தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..... 
                                                                                                     மீண்டும் பேசுவேன்...

Wednesday, September 21, 2011

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா






புதுச்சேரி மாநில நிர்வாகிகள் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கடந்த செப்டம்பர் 17  அன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை வில்லியனூர் கொம்யூன் அமைப்பாளர் திரு S . வீரமுத்து தலைமை தாங்கி நடத்தினார்.இவ்விழாவில் வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி அமைப்பாளர்  திரு T. உதயகுமார், வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு. S . கார்த்தி, வில்லியனூர் கொம்யூன் இளைஞனர் அணி பொருளாளர் திரு R . பார்த்திபன். நெட்டப்பாக்கம் கொம்யூன் இளைஞனர் அணி அமைப்பாளர் திரு I . கபாலி, நெட்டப்பாக்கம் கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு K . ரமேஷ், திருபுவனை கொம்யூன் இளைஞனர் அணி ஒருங்கிணைப்பாளர் திரு S . பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடர்ச்சியாக திருபுவனை, வில்லியனூர், மடுகரை, திருக்கனூர் காவல் நிலையங்களுக்கு தந்தை பெரியார் புகைப்படம் அமைப்பின் சார்பாக  வழங்கப்பட்டது

கே. என்.பேட்டை கிளை அலுவலகம் திறப்பு விழா

கடலூர்  மாவட்டம் கே. என்.பேட்டை கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 18-09-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்  திரு N .விஜயராம்  வரவேற்புரை வழங்கினார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல்   அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Friday, September 16, 2011

தேவங்குடி கிளை அலுவலகம் திறப்பு விழா



கடலூர் மாவட்டம்  தேவங்குடி கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 01 - 09 - 2011 மாலை 3 மணியளவில் அன்று  நடைபெற்றது. கிளை அமைப்பாளர் திரு S . சொக்கலிங்கம், கிளை துணை அமைப்பாளர் திரு G. கோபால்சாமி மற்றும் கிளை இணை அமைப்பாளர் திரு J . அரங்கசாமி ஆகியோர் இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். நமது அமைப்பின் தலைவர் உயர்திரு ர. சிவநேசன்  அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட கல்வி அணி ஒருங்கிணைப்பாளர் திரு R . சுந்தர், கடலூர் மாவட்ட போக்குவரத்து அணி அமைப்பாளர் திரு R . ராஜன் பாபு, சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர் திரு S . நடராஜன் மற்றும் திரு C . சிவலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

"புதியதோர் உலகம் செய்வோம்" மாத இதழ் வெளியிடப்பட்டது



கடந்த 01 - 09 - 2011  அன்று நமது இயக்கத்தின் சார்பாக (NSWF உறுப்பினர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில்) " புதியதோர் உலகம் செய்வோம்"  மாத இதழ் வெளியிடப்பட்டது . நமது இயக்கத்தின் தலைவர் உயர்திரு ர. சிவநேசன் அவர்கள் வெளியிட இவ்விதழின் ஆசிரியர் திரு G .மருதமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ்விழாவிற்கு தென் மண்டல தலைமை அமைப்பாளர் திரு. N . விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். இவ்விழாவில் புதுசேரி மாநில தலைமை அமைப்பாளர் திருமதி B . பானு , கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு K . நடராஜன் , திரு K . பாரதிமோகன் , திரு R . திருமாறன் , திரு R . செந்தில் குமார், திருமதி R . சுமதி,  திருமதி V . சாவித்திரி, திருமதி B .கஜலக்ஷ்மி, திருமதி அமுதா, திருமதி P . கீதா , சிறப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு N . ஐயப்பன் , S . நடராஜன், C . சிவலிங்கம், M . ராஜா, J .ஜெயவேலன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை தொடர்ந்து நடைபெற்ற General Body & Governing Body Meeting கில் கலந்து கொண்ட அனைவரும் ஒருமனதுடன் Governing Body & Member secretary ( Member Cum Secretary ) ஆகியவற்றை முழுமையாக கலைப்பதாக தீர்மானம் நிறைவேற்றினர் 

Wednesday, September 14, 2011

ஏழை மாணவருக்கு இலவச கண் சிகிச்சை

சேலம் மாவட்டம் மேட்டூர் ஒன்றியம்  நிர்வாகிகள் சார்பாக 13 -09 -2011 அன்று ஏழை மாணவருக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி  வழங்கப்பட்டது