கடலூர் மாவட்டம் உடலபட்டு கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 31-07-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் திருமதி K . சுசீலா, ஒன்றிய மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி P. கலா மற்றும் ஒன்றிய மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் செல்வி G . முத்தம்மாள் ஆகியோர் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். தலைவர் உயர்திரு ர. சிவநேசன் அவர்கள் கிளை அலுவலகத்தை திறந்து வைத்து சட்ட விழிப்புணர்வு தொடர்பாக சிறப்புரை ஆற்றினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி , கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் , கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் திருமதி R . சுமதி, திருமதி B . கஜலக்ஷ்மி, திருமதி M . அமுதா மற்றும் திருமதி P . கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.