Friday, July 29, 2011

சிதம்பரம் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா











சிதம்பரம் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கும் விழா கடந்த 27 -07 -2011 மாலை 3 மணியளவில் சிதம்பரம் மேல வீதி O .S . தீன் பிடிங்கில் நடைபெற்றது. உயர்திரு தலைவர் R. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட   ஒருங்கிணைப்பாளர் திரு K . நடராஜன், கடலூர் மாவட்ட இணை  ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்  திருமதி R . சுமதி, திருமதி B . கஜலக்ஷ்மி, காரைக்கால்  மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. G . மருதமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் திரு K . V . M . S . சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் திரு V . சிவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிதம்பரம் நகர அமைப்பாளர்கள் திரு R . திருமாறன் மற்றும் திரு K . பாரதி மோகன் ஆகியோர் விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தனர். விழாவின் இறுதியாக சிதம்பரம் அன்பகம் முதியோர் இல்லத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.