கடலூர் மாவட்டம் குடிகாடு கிளை அலுவலகம் திறப்பு விழா கடந்த 21-08-2011 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு v .சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். தென்மண்டல தலைமை அமைப்பாளர் திரு N . விநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு . R . செந்தில்குமார் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.தலைவர் உயர்திரு R . சிவநேசன் அவர்கள் இவிழாவில் தலைமை வகித்தார். கடலூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K . பாரதி மோகன் , சிதம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் திரு. R . திருமாறன், கடலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி R . சுமதி, கடலூர் மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் திருமதி V . சாவித்திரி, கடலூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் திருமதி P . கீதா மற்றும் வண்டிப்பாளையம் திருமதி M. அமுதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். திரு V . சசி மற்றும் திரு R . வீரபாலன் ஆகியோர் நன்றியரை ஆற்றினர்.