Tuesday, June 28, 2011

விருத்தாசலம் கிளை திறப்பு விழா



கடந்த 26 -06 -2011 அன்று மாலை 4 மணி அளவில்  கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் நமது அமைப்பின் புதிய "NSWF -மனித உரிமைகள் பிரிவு" கிளை திறப்பு விழா நடைபெற்றது. உயர்திரு தலைவர் ர. சிவநேசன் அவர்கள் புதிய கிளையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் கடலூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. N . விநாயக மூர்த்தி, கடலூர் மாவட்ட துணை  ஒருங்கிணைப்பாளர் திரு. R. செந்தில் குமார், கடலூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி V . சாவித்திரி, திருமதி R . சுமதி, குள்ளஞ்சாவடி நிர்வாகிகள் திரு சிவபாலமூர்த்தி மற்றும் திரு K .வேல்முருகன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நகர ஒருங்கிணைப்பாளர் திரு B. சம்பத் குமார்  வரவேற்ப்புரை வழங்கினார். நகர இணை ஒருங்கிணைப்பாளர் திரு K . கிருஷ்ணராஜ், நகர துணை ஒருங்கிணைப்பாளர் திரு K . ஜெயகுமார்அகியோர் நன்றியுரை வழங்கினர்.